Wednesday 14 December 2011

பெண் பெற்ற பெண்பற்றி! கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

கற்பனைத்தேன் பிலிற்றும் எழுத்தாக்கங்கள்!

சிந்தனைத் தெளிவை, படைப்பாற்றலை

பார்த்தவை, படித்தவை, கேட்டவை இவற்றின் மறுபதிவை

படிப்பார் நெஞ்சத்தை ஈர்க்கும் பேராற்றலை

தன்னகத்தே பெற்றிருப்பது உள்ளுந்தொறும்

பெருமகிழ்வு படைப்பவை.

ஆங்கில நூலாசிரியர்களின் வடிக்கும் தன்மை கைவரப் பெற்றிருப்பது
வியந்து பாராட்டத்தக்கது.

பேராழிபோல் ஆங்கிலமும், ஊருணிபோல் தமிழும்
தன் எழுதுகோலால் ஏட்டில் பதிந்தாலும்
அத்துணையும் நெஞ்சிற்கு நிறைவு தருபவையே!

கவிதையோ கதையோ நிகழ்ச்சிக் குறிப்போ
அத்துணையும் வித்தெனத்தோன்றி விருட்சமாய் வளரும் பாங்கு
ஏற்றிப் போற்றத்தக்கது.

தொடர்க! பல்குக! சிறக்க! நிறைக! வாழ்த்துக்கள்!
                                                                           
கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

1 comment:

  1. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete