Monday 1 October 2012

சித்தி! -கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)

சித்தி!
 
 
தாயின்பின்     தோன்றியவள்!    தந்தைதன்       தம்பியரின்
 
தூயிதய             நாயகிகள்              தாதைகாண்    நற்றுணைவி
 
போயினபின்    தாரமென              வந்திட்ட          சீர்மாது
 
சேயினத்து       சித்தியாக             சேமங்கள்        சேர்த்திடுவர்!
 
தாயிதயம்,       இன்சொல்சேர்    ஆதரவு,              நற்பாசம்,
 
தன்மதலை      மூத்தாளின்          எச்சமென        வேறுபடா
 
ஒத்தநிலை      காட்டுமுளம்       கொண்டமையும்  பண்பமைந்தால்
 
சித்தியாக          வந்தாலும்            சீர்தாய்தான்     அன்னவளே!
 
 
-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

No comments:

Post a Comment